Friday, March 13, 2020

கடவுள் இல்லை எனில் தப்பு என்பதே இல்லை

கடவுள் இல்லை எனில் தப்பு/பாவம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை!!

-------

தர்க்கவியலை பயன்படுத்தி எது கூடாது எது கூடும் என பார்க்க இயலாது.

1. பாலியல் உறவு:

*ஓரின சேர்க்கை செய்வது செய்பவனின் உரிமை என்பார்கள்.

அதை தப்பு என எந்த நாத்திகராலும் நிரூபிக்க இயலாது.

ஏனெனில் ஒரு மனிதன் யார் மேல் ஈர்ப்பு கொள்கிறான் என்பது அவனாக தேர்ந்தெடுப்பது அல்ல.

ஒரு ஆண் இன்னொரு ஆணில் ஈர்ப்பை கண்டால், நாத்திகர்களால் அவனை குறை சொல்லவோ தடுக்கவோ இயலாது.

*அதேபோன்று ஒரு மனிதன் தன் சொந்த தாயிடமோ , மகளிடமோ பாலியல் ஈர்ப்பை காண்பானாயின்,  அதை நாத்திகரால் குறைசொல்லவோ தடுக்கவோ இயலாது.

*ஒருவன் சிறு குழந்தையை பார்த்து காமம் கொள்கிறான், இன்னொருவன் மிருகத்தை பார்த்து காமம் கொள்கிறான்.

இவையெல்லாம் ஹோர்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது என கற்றவர்கள் அறிவார்கள்.

அப்படியிருக்க நாத்திகர்களால், இம்முறைகேடான பாலியல் கலவிகளை தவறு என கூற இயலாது.!!

அதை அவனவன் சுதந்திரம் ,ஹோமோன் என்றே சமாளிக்க வேண்டும்!!

ஒருவன் ஈர்க்கப்பட்ட விசயத்தை செய்வதை தடுக்க நாம் யார் என தத்துவம் பேசுவர்.

2.கொலை:

*நாத்திகர்கள் சாப்பாட்டிற்காக மாட்டை,ஆட்டை,கோழியை,மீனை,செடிகளை கொல்வார்கள்.

*நுளம்பை கொல்வார்கள்.

*நுண்ணுயிர்களை கொல்வார்கள்

*பாம்பு, தேள் ஆகியவற்றை கொல்வார்கள்.

இவைகளெல்லாம் உயிர் தானே!!

அப்படியென்றால், மனிதனிடம் இருப்பதும் அதே உயிர் தானே.

அப்படியெனில் மனிதனை ஏன் கொல்ல கூடாது???

தர்க்கவியலாலும் , அறிவியலாலும் நிரூபிக்க முடியுமா??

*மனிதன் சமூக விலங்கு என்பதால், தனக்கு தொல்லையாக இருக்கும் சக மனிதரையோ, சக கூட்டங்களையோ கொல்லலாமா?

தப்பு எனின், மற்ற உயிர்களையும் கொல்லாது செத்துப்போகலாம்!

மனிதனை சாப்பாட்டுக்காக கொல்லலாமா??

இவற்றுக்கெல்லாம் நாத்திகத்தால் பதில் தர இயலாது.

நாத்திகத்தில் ஒழுக்கம், விதிகள் என எதுவும் இல்லை!!

எல்லாமே கற்பனை!!

ஒருவரின் சிந்தனை இன்னொருவருக்கு மாற்றமாக இருக்கும்.

இவற்றை தப்பு என கூற ஒரே ஒருவனாலேயே முடியும்!!

அவன் தான் இறைவன்.!!

தன் படைப்பை பற்றியும் , அவை இருக்க வேண்டிய முறைபற்றியும் மிக அறிந்தவன்.



3.நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக வாழ்வதும்:

உலகில் கெடுதிகள் செய்பவர் நன்றாக வாழ்கிறார்கள். நல்லவர்கள் துன்ப படுகிறார்கள்.

கொலைகள் செய்பவன் கூட நன்றாக வாழ்கிறான். நல்லதை செய்கிறவர்கள் துன்ப படுகிறார்கள்.

கடவுள் இல்லை எனின்,

நல்லவனாக வாழ்வதில் அர்த்தமே இல்லை!!

கெட்டவனாக வாழ்வதே சிறப்பு!



அநீதி இழைக்கப்பட்டு இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி, கடவுள் இருந்தால் மட்டுமே சாத்தியம்!

கடவுளை படைத்தது யார்? உலகத்தை படைக்க முன் அவர் எங்கே இருந்தார்?

கடவுளை படைத்தது யார்?  உலகத்தை படைக்க முன் அவர் எங்கே இருந்தார்? 

------------------------------------------------


கடவுளை படைத்தது யார்? அவர் ஆரம்பத்தில் எங்கே இருந்தார் என்பன நாத்திகர்களால் கேட்கப்படும் கேள்விகளில் மிக முக்கியமானவையாக உள்ளன.



1.கடவுளை படைத்தது யார்?


உலகத்திலுள்ள எந்த ஒன்றுமே தானாக உண்டாகியிருக்க முடியாது

பூமி மனிதர்கள் வாழும் விதமாக உண்டாக்கப்பட்டுள்ளது

ஒவ்வொன்றும் துள்ளியமாக இயங்குகின்றன.

ஏன், மனித உடலிலுள்ள உறுப்புகள் கூட அதிசயமாக குறிப்பிட்ட விதத்தில் இயங்குகின்றன.. அதே போன்றே மற்ற உயிர்களும் உள்ளன.

இவை அனைத்தும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதை துல்லியமாக உணர முடிகிறது.

ஆரம்பத்தில், பெருவெடிப்புக்கு முன்னால், ஹிக் போஸோன் துகள் இருந்துள்ளது.

அதுவே வெடித்து இப்போதுள்ளது போல அண்டம் உண்டானதாக  நாத்திகர்கள் நம்புகிறார்கள்.

இந்த ஹிக் போசோன் தானாக உண்டாகியிருக்க முடியாது.

இவ்வாறு தான் வெடித்து பின் உயிர்கள் தோன்றவேண்டும் என அத்துகளால் தீர்மானிக்க முடியாது!

ஏனெனில் , அந்த ஹிக் போசோன் program செய்யப்பட்டுள்ளதே அன்றி, அது programmer அல்ல.

இதை சரியாக ஒரு உதாரணத்தில் சொல்வதானால்,

ஒரு ரோபோவை ஹிக் போசோன் துகளுக்கு உவமையாக கூறலாம்.

ரோபோவை ஒருத்தர் உண்டாக்கி, அதற்கு coding செய்து program பண்ணி அதை இயக்கவோ அல்லது தானாக இயங்கவைக்கவோ செய்யப்படுகிறது.

அதேபோன்று தான், ஆரம்பத்தில் இருந்த ஹிக் போசோன் துகள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் மிகச்சிறந்த ஞானமிக்க programmer மற்றும் மிக நுண்ணிய படைப்பாளரால் அது உண்டாகியிருக்க வேண்டும் என நாம் கூறுகிறோம்.

இதை சாதாரண அறிவு உள்ள ஒருவராலும் புரிந்து கொள்ள இயலும்.

அப்படியானால் , கடவுளை படைத்தது யார்??:

கடவுளென்பவர் program செய்யப்பட்டவர் அல்ல..

அவர் தன் விருப்பத்தின்படி நடப்பவர்.

மிக பயங்கர சக்தி மிக்கவர்.

அவர் என்றென்றும் நிலையாக இருந்தவர், இருப்பவர்.!

அப்படிப்பட்ட ஒருவர் படைக்கபட்டார் என்று கூறுவதே அபத்தமாகும்!!

இந்த கேள்வியே லாஜிக் அற்றது ஆகும்.

உதாரணமாக,

*சேவல் முட்டையிட்டால், என்ன நிறமாக இருக்கும்?

*பூரண ஆணொருவன் பிள்ளை பெற்றால், என்ன பாலில் குழந்தை பிறக்கும்?

இதுபோன்ற அர்த்தமற்ற லாஜிக் இல்லாத கேள்வியே இது.

ஏனெனில் கடவுள் என்றாலே படைக்கப்படாமல், என்றென்றும் நித்தியமாக இருப்பவர் , அவரே சகலதையும் படைப்பவராக இருப்பார்.

அப்படிப்பட்டவரை படைத்தவர் யார் என கேட்பது , கடவுளின் வரைவிலக்கணத்திற்கே முரண் ஆகும்.

ஏனெனில் அவர் படைக்கப்பட்டிருந்தால், அவரை படைத்தவர் தான் கடவுளாக ஆவார். மாறாக படைக்கப்பட்ட இவர் ஆக மாட்டார்!


ஆனால் ஹிக் போசோனை இதற்கு ஈடாக கருத முடியாது.. ஏனெனில் அது ப்ரோக்ரமர் அல்ல.. மாறாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட துகள் ஆகும்!!
------------------



2.படைக்க முன்பு கடவுள் எங்கே இருந்தார்?:


இது பெரிய யோசிக்க வேண்டிய அளவுக்கு உண்டான ஒன்றே இல்லை!

இவர்கள் புரியும் விதமாகவே கேட்பதானால்,

பெருவெடிப்புக்கு முன்,

ஹிக் போசோன் துகள் எங்கே இருந்தது???

அது வெடித்தி சிதறி  பெரு நட்சத்திரங்களெல்லாம் உண்டகிவிட்டன.

இன்னும் அண்டம் விரிவடைந்துகொண்டே செல்கிறது.

இத்தனைக்கும் எப்படி இடம் கிடைத்தது??

இவற்றுக்கு என்ன பதில் சொல்லலாம்??

இடம் என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தி கூற முன்பு, "எங்கே இருந்தார்? எங்கே உண்டானது?" என்ற கேள்விகள் அபத்தமாகும்.!

வெற்றிடம் அளவில்லாமல் இருக்கிறது.. அதனால் தான் ஹிக் போசானால் இன்னும் வெடித்ததின் வெளிப்பாட்டால் இன்னும் விரிவடைகிறது.

ஆனால் அது அண்டத்திற்கு வெளியில் அலுப்பதால், அவ் இடத்திற்கு வரைவிலக்கணம் கொடுக்கவில்லை!

அப்படியிருக்க இக்கேள்வி அபத்தமானது ஆகும்.

காரணம் வரைவிலக்கணம் கொடுக்கப்படாத இடம் நிறையவே இருந்துள்ளது.

*கடவுள் படைக்க முன்பு என்ன பண்ணிட்டிருந்தார.??:


நேரம் என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தவே இல்லாத காலத்தில், " அதற்கு முன்பு" என்ற ஒன்றை கூறவே இயலாது.

இறைவன் தான் காலத்தை விதித்தவன். அவன் விதிக்க முன்பு காலம் என்பது இல்லை.

அது undefined!!

ஆகவே இதுவும் அர்த்தமற்றது